சத்தியம் செய்யப் போகிறீர்களா?
ஒருவருக்கு இன்ன காரியத்தை செய்து தருகிறேன் என்று உளமாற உறுதியளிப்பதே சத்தியம். ஐயப்பன் பாடல் ஒன்றில் சத்தியமான பொன்னு பதினெட்டாம் படி சாஸ்தா என்ற ஒரு வரி வரும். சத்தியத்தின் சொரூபமாக விளங்குபவர் சாஸ்தா. பதினெட்டாம் படியில் கால் வைக்கும் போது இனி இந்த வாழ்க்கை நிலையானது என்ற எண்ணத்தை கைவிடுவேன் வாழ்வு நிலையென நினைத்து ஆணவத்துடன் நடந்து கொள்ள மாட்டேன் என்ற சத்திய வரிகளை மனதில் நினைக்க வேண்டும். அதை வாழ்வின் இறுதிவரை கடைபிடிக்க வேண்டும்.
டிச 06, 2024