கடவுளை உறவாக்க என்ன வழி | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
கடவுளை உறவாக்க என்ன வழி கடவுளை நமது உறவுகள் போலவும் நண்பன் போலவும் கருதி வணங்குவதே உயர்ந்த பக்தி ஆகும். தனது முற்பிறப்பில் அன்னை பார்வதியை தன் மகள் போல் கருதி வழிபட்டாள் காஞ்சனமாலை. அதன் பலனாக பார்வதி தேவி அவளது மகளாக மீனாட்சி என்ற பெயரில் அவதாரம் செய்தாள். பாரதியார் கண்ணபிரானை தனது காதலியாகக் கருதி கண்ணம்மா என்ற பெயரில் காதலிக்கவே செய்தார். சுந்தரர் சிவபெருமானை தன் நண்பராக்கிக் கொண்டார்.
மார் 27, 2025