ஈசனை தரிசித்து அரிசியை சேகரித்த பக்தர்கள்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில், அனைத்து ஜீவராசிக்கும் ஈசன் படி அளப்பதை எடுத்துரைக்கும் அஷ்டமி சப்பர விழா நடைபெற்றது. அதிகாலையில் நடந்த சிறப்பு அபிஷேகம், அலங்காரத்திற்கு பின் அலங்காரிக்கப்பட்ட சப்பரத்தில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனி சப்பரத்திலும் எழுந்தருள வீதி உலா நடைபெற்றது. பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர்.
டிச 23, 2024