/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ முருகன் கோயில்களில் நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள் | thaipoosam festival | tn
முருகன் கோயில்களில் நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள் | thaipoosam festival | tn
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சண்முகநாதன் மலைக்கோயிலில் சர்வ அலங்காரங்காரத்துடன் சண்முகநாதன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காரைக்குடி, தேவகோட்டை, கண்டனூர் சுற்று வட்டார பக்தர்கள் பாதையாத்திரையாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர். தேவகோட்டை பக்தர்கள் மங்கள மேளம் முழங்க 108 காவடிகள் சுமந்து வந்தனர். கரும்பு தொட்டில் கட்டியும், பால்குடம் எடுத்தும், நெய் தீபம் ஏற்றியும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.
பிப் 11, 2025