/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ உலகத்தின் சிறந்த இடம் திருமழிசை - பிரம்மன் சொன்ன வரலாறு | Must Visit Temple in TamilNadu
உலகத்தின் சிறந்த இடம் திருமழிசை - பிரம்மன் சொன்ன வரலாறு | Must Visit Temple in TamilNadu
திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில் ஜெகந்நாதப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. மூலவர் ஜெகந்நாதப்பெருமாள். தாயார் திருமங்கைவல்லி. ஒருமுறை பரமசிவனும், பார்வதியும் ஆகாயத்தில் ரிஷப வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, யாகத்தில் இருந்த திருமழிசை ஆழ்வாரைக்கண்ட பார்வதி, சிவனிடம் கூறி ஆழ்வாருடன் வார்த்தை விளையாட கூறினார். அந்த ஆட்டமும் ஆரம்பித்தது. ஆழ்வாரின் சொல்வன்மையை கண்டு வியந்த சிவன் அவருக்கு பக்திசாரர் என பெயர் சூட்டினார். சைவத்திலும், வைணவத்திலும் ஈடுபட்டு பாடல்கள் இயற்றிய இவர் நான்காம் ஆழ்வார். கால் கட்டைவிரல் நகத்தில் ஞானக்கண்ணைப்பெற்ற இவர் அவதரித்த இந்த கோயிலில் இவருக்குகென தனிச்சன்னதி உள்ளது.
ஜூலை 19, 2024