சந்தேக நபர்களை எப்.ஆர்.எஸ். முக அடையாள செயலி வாயிலாக சோதனை
சந்தேக நபர்களை எப்.ஆர்.எஸ். முக அடையாள செயலி வாயிலாக சோதனை | Chennai | Aftermath of bomb blast incident security tightened across the state டெல்லியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பின் மத்திய உள்துறை அமைச்சகம் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் பஸ், ரயில் நிலையங்களில் சோதனைக்கு பின் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். மாநில முழுவதும் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. சென்னை உள்ளிட்ட அனைத்து காவல் மாவட்டங்களிலும் துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் தலைமையில் இரவு முழுவதும் போலீசார் சோதனை ஈடுபட்டனர். சந்தேக நபர்களிடம் எப்.ஆர்.எஸ்.எனும் முக அடையாள செயலி வாயிலாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். குண்டுவெடிப்பிற்கு பின் வழக்கமான மேற்கொள்ளப்படும் வாகன சோதனைகளில் அதிதீவிரப்படுத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளது.