உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / அய்யா அரஹர சிவ சிவ அய்யா பக்தி கோஷம் முழங்க புறப்பட்ட தேர்

அய்யா அரஹர சிவ சிவ அய்யா பக்தி கோஷம் முழங்க புறப்பட்ட தேர்

அய்யா அரஹர சிவ சிவ அய்யா பக்தி கோஷம் முழங்க புறப்பட்ட தேர் | Chennai | Ayya Vaikunda Dharmapati Temple Therotam சென்னை, மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலில் புரட்டாசி மாத திருவிழா கடந்த 4 ம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் விழாவில் அய்யா காளை, அன்னம், கருடர், மயில், ஆஞ்சநேயர், சர்பம், மலர்முக சிம்மாசனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலா வந்தார். தினமும் திருஏடு வாசித்தனர், காலை 6 மணிக்கு பணிவிடை உகப்படிப்பு நடந்தது. பகல் 12 மணிக்கு அய்யா வைகுண்ட தர்மபதி அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். மணலி புதுநகரில் வீதி உலா வந்தது. அய்யா அரஹர சிவ சிவ அய்யா உண்டு என்று என்று விண்ணதிர பக்தி கோஷங்களை எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 1.30 மணிக்கு அகண்டநாமம், 1.45 மணிக்கு அய்யா பூம் பல்லக்கு வாகனத்தில் பதிவலம் வருதல், வைகுண்டசோபனம், அண்டநாமம், திருநாமக்கொடி இறக்குதல், பள்ளியுணர்த்தல், திருநாள் சேவை மகத்துவகானம், இனிமம் வழங்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

அக் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை