உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது | Heavy Rain | TN

தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது | Heavy Rain | TN

தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னல் மற்றும் பலத்த தரை காற்றுடன் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கடலுார், பெரம்பலுார், அரியலுார் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யலாம். இதற்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யலாம். நாளை மறுநாள் நீலகிரி, கோவையில் சில இடங்களில் மிக கனமழை பெய்யலாம் எனவும், ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆக 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ