பன்முகச் சொற்பொழிவாளர் இளம்பிறை மணிமாறன் பேச்சு
சென்னை எம்.ஓ.பி. வைணவ மகளிர் கல்லூரியில் லஷ்மி ஆனந்தாச்சாரி அறக்கட்டளை சார்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. பன்முகம் கொண்ட இயகோகா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். முனைவர் ராஜேஸ்வரி அறிமுக உரையாற்றினார். நிகழ்ச்சியில் இயகோகா சுப்பிரமணியன், பன்முகச் சொற்பொழிவாளர் இளம்பிறை மணிமாறன் உள்ளி்ட்டோருக்கு இயற்கை சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை முனைவர் அர்ச்சனா பிரசாத் வழங்கினார். #Chennai #MOPLakshmiAnandachariFoundation #VaishnavaWomensCollege #WomenEmpowerment #ChennaiEvents #CommunitySupport #MOPFoundation பொறியாளர் அனந்தாச்சாரி திருநாராயணன், தனது தாயாரின் நினைவாக நிறுவிய லஷ்மி அனந்தாச்சாரி அறக்கட்டளை சார்பில் எம் ஓ.பி. மாணவிகள் மற்றும் உதவும் கரங்கள் எனும் தன்னார்வ அமைப்பு, கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கி வருகிறது. விழாவின் முத்தாய்ப்பாக ஆன்மிகம் மற்றும் கலாச்சாரம் எனும் தலைப்பில் பன்முகச் சொற்பொழிவாளர் இளம்பிறை மணிமாறன் பேசினார்.