/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ சென்னையில் 3 நாள் நடக்கும் NCC மாணவர் போட்டி | NCC Competition | Chennai
சென்னையில் 3 நாள் நடக்கும் NCC மாணவர் போட்டி | NCC Competition | Chennai
தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் தேசிய மாணவர் படை இயக்குனரகம் சார்பில் மாநில அளவிலான 14வது தேசிய மாணவர் படை போட்டி இன்று முதல் 3 நாள் நடக்கிறது. சென்னை தரமணி அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இதன் துவக்க விழா நடந்தது. ஆவடி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானி பன்னீர்செல்வம், தேசிய மாணவர் படை சென்னை குழுவின் தளபதி கர்னல் அரிந்தம் மஜிம் மாணவர்கள் முன் பேசினர். 1500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். 12ம்தேதி பரிசளிப்பு விழா நடக்கிறது.
பிப் 10, 2024