/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ அச்சன்கோயிலில் இருந்து சபரிமலை கொண்டு செல்லப்படும் நெற் கதிர்கள் | Buddharisi Puja | Sabarimala
அச்சன்கோயிலில் இருந்து சபரிமலை கொண்டு செல்லப்படும் நெற் கதிர்கள் | Buddharisi Puja | Sabarimala
சபரிமலையில் நிறைபுத்தரி பூஜை வரும் ஆகஸ்ட் 12ம் தேதி காலை 5.45 மணி முதல் 6.30 மணிக்குள் நடக்கிறது. இதற்காக கோயில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கபடுகிறது. நிறைபுத்தரி பூஜைக்கான நெற் கதிர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அச்சன்கோயிலில் இருந்து சபரிமலைக்கு ஊர்வலமாக கொண்டு செல்லபடுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருஆபரணக் கமிட்டி தலைவர் தென்காசி ஏ.சி.எஸ்.ஜி. ஹரிஹரன், உப தேச கமிட்டி தலைவர் பிஜூலால் மற்றும் அச்சன்கோயில் தேவசம் நிர்வாக அதிகாரி துளசிதரன் பிள்ளை செய்து வருகின்றனர்.
ஆக 10, 2024