உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / பிரம்மோற்சவத்தின் 2ம் நாள் சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா

பிரம்மோற்சவத்தின் 2ம் நாள் சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா

பிரம்மோற்சவத்தின் 2ம் நாள் சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா | Tiruchanur | Brahmotsavam flag hoisting at the Padmavathi Thayar Temple திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளான இன்று தாயாருக்கு பல்வேறு அபிேஷகங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சின்ன சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளினார். வீதி உலாவில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயில் ஜீயர்கள் திவ்ய பிரபந்தங்கள் பாடி, அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க பத்மாவதி தாயார் வீதி உலா வந்தார். தாச சாகீத்திய திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலத்தில் இருந்து வந்த பக்தர்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 4 மாடவீதியில் திரளான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து தாயாரை வழிப்பட்டனர். பிரம்மோற்சவத்தின் 2ம் நாளான நாளை காலை பெரிய சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருள்கிறார். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கோயில் முழுவதும் வண்ண மின்விளக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

நவ 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை