புதுச்சேரியில்பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை|Rain Alert | School, College Leave |TN |Puducherry
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் கடலூர், மயிலாடுதுறையில் ரெட் அலர்ட், சென்னை உட்பட 4 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டு உள்ளது. பாதுகாப்பு கருதி தமிழகத்தின் கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகபட்டிணம், திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், கொடைக்கானலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.