உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதுாறு | Seeman | FIR

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதுாறு | Seeman | FIR

விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதுாறாகப் பேசியதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து பேசிய சீமான் ஏற்கனவே அ.தி.மு.க மேடைகளில் பாடப்பட்ட கருணாநிதி குறித்த பாடலை பாடியதற்காக சாட்டை துரைமுருகனை கைது செய்து உள்ளனர். அந்த பாடலை யாரோ எழுதி உள்ளனர். அதை நானும் பாடுகிறேன் என கூறி பாடி காட்டினார். இதற்காக என் மீது நடவடிக்கை எடுத்தால் அதை சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் சவால் விட்டார். அந்தப் பாடலில் இடம் பெற்றிருந்த ஒரு வார்த்தை குறிப்பிட்ட சமூகத்தை குறிப்பிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் தெரிந்தே அந்த வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அஜேஷ் என்பவர் சென்னை பட்டாபிராம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரித்த ஆணையம் வழக்குப்பதிவு செய்து அதற்கான நிலை அறிக்கையை நாளைக்குள் ஆணையத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சீமான் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

செப் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ