/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க சுவாமி தரிசனம் | Tirupati | Malayapaswamy dharsan
பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க சுவாமி தரிசனம் | Tirupati | Malayapaswamy dharsan
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 4 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3ம் நாளில் சிம்ம வாகனம் மீது யோக நரசிம்மர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். நான்கு மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஜீயர்கள் திவ்ய பிரபந்தங்கள் பாட வீதி உலா நடைபெற்றது. நான்கு மாட வீதியில் காத்திருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து கோவிந்தா கோஷம் முழங்க மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவத்தின் 4-வது நாளில் கற்பக விருட்ச வாகனத்திலும், இரவு சர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருள்வார்.
அக் 06, 2024