முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு |TTF Vasan prank video action | Bank Account freezed Chenn
கோவையைச் சேர்ந்தவர் யூடியூபர் TTF வாசன். கடந்த ஆண்டு ஜூலை மாதம் நண்பர்களுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய சென்றார். தரிசனத்திற்காக வெயிட்டிங் லைனில் நிற்கும் போது நண்பர்களுடன் வீடியோ எடுத்துள்ளார். தேவஸ்தான ஊழியர்கள் போல நடித்து தரிசன வெயிட்டிங் ஹால் கேட்டை திறந்து விடுவது போல பக்தர்களை வைத்து வீடியோ எடுத்தனர். வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ தேவஸ்தான I.T விங் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. கோயிலின் நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தி பக்தர்கள் மத நம்பிக்கைக்கு இடையூறு செய்ததாக தேவஸ்தான அதிகாரிகள் TTF வாசன் மீது F.I.R பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணைக்கு ஆஜர் ஆகாததால் அவரது வங்கி கணக்கை திருமலை போலீசார் முடக்கினர். வாசன் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜாமின் கிடைத்தவுடன் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக வாசன் தரப்பு வக்கீல் முத்து தெரிவித்தார்.