வின்னை தொட்ட பராசக்தி கோஷம் |Coimbatore Kaliamman temple
கோவை மாவட்டம் உடுமலை பாலப்பம்பட்டி காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. யாகசாலை பூஜைகள் முடிந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
ஜூன் 17, 2024