/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ முருகன் வள்ளி தெய்வானை ராஜ அலங்காரத்தில் காட்சி Coimbatore Kumarigiri Thandayuthapani Temple
முருகன் வள்ளி தெய்வானை ராஜ அலங்காரத்தில் காட்சி Coimbatore Kumarigiri Thandayuthapani Temple
சேலம் சன்னியாசி குண்டு குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக முருகனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பால்குடம் ஊர்வலம் புறப்பட்டது. உற்சவர் முருகனுக்கு 1008 லிட்டர் பால் மற்றும் இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முருகன், வள்ளி, தெய்வானை பட்டாடை உடுத்தி ராஜ அலங்காரத்தில் எழுந்தருளினர். மகா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கௌரவ தலைவர் செந்தில்நாதன், தலைவர் மாணிக்கம், கவுன்சிலர் திருஞானம், முன்னாள் அறங்காவலர் செல்வராஜ் ஆகியோர் விழா ஏற்பாட்டை செய்திருந்தனர்.
ஜூலை 29, 2024