ஆட்டை தூக்கி சென்ற சிறுத்தை leopard entered house covai
கோவை மாவட்டம் லிங்காபுரத்தில் நள்ளிரவு உதயகுமாரின் கொட்டகையில் இருந்த ஆட்டை சிறுத்தை ஒன்று கவ்விச் சென்றது. உதயகுமார் வனத்துறையினரிடம் புகார் கூறினார். வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடங்களை பதிவு செய்து, சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். அருகில் குடியிருப்புகள் பள்ளிகள் இருப்பதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
அக் 17, 2024