/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ குறைந்த பிரிமியம்; அதிக காப்பீடு | தபால் துறையின் புதிய திட்டம்
குறைந்த பிரிமியம்; அதிக காப்பீடு | தபால் துறையின் புதிய திட்டம்
தபால் துறை சார்பில் விபத்து காப்பீட்டு திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி ரூ. 5 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை விபத்து காப்பீடு கிடைக்கும் வகையில் மிகக் குறைந்த பிரிமிய தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விபத்து என்பது எப்போது நடக்கும் என்று சொல்ல முடியாது. இதனால் ஏற்படும் மருத்துவ செலவை எதிர்நோக்கும் வகையில் இந்த மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளது. விபத்தின்போது இறப்பு ஏற்பட்டால் காப்பீடு தொகை அந்த குடும்பத்துக்கு கிடைக்கும். இந்த காப்பீடு திட்டத்தை வீட்டுக்கு வரும் தபால்காரரிடமே தொடங்கலாம். தபால் துறையின் விபத்து காப்பீடு திட்டம் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
மார் 14, 2025