21 ஆசனத்தை மாத்திரைகளில் வரைந்து அசத்திய நகை தொழிலாளி | Coimbatore | Articolor on tablet
21 ஆசனத்தை மாத்திரைகளில் வரைந்து அசத்திய நகை தொழிலாளி | Coimbatore | Articolor on tablet | asanas drawn on a tablet ஜூன் 21 ம் தேதி உலக யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. யோகா தினத்தை முன்னிட்டு, யோகா முத்திரைகள் இருக்க, மாத்திரைகள் நமக்கு எதற்கு தினமும் யோகா செய்வோம் உடலை நோய் நொடியின்றி காப்போம் என்பதை வழியுறுத்தி கோவை குனியமுத்தூரை சேர்ந்த நகை பட்டறை தொழிலாளி ராஜா 21 மாத்திரைகளில் யோகாசனங்களின் ஓவியங்களை பையின்டிங் மூலம் வரைந்துள்ளார். அதில் பத்மாசனம், புஜங்காசனம், சர்வங்காசனம், யோகமுத்ரா, ஹலாசனம் நின்ற பாதாசனம். சிரசாசனம், சக்ராசனம், என 21 ஆசனங்களை, 3 மணி நேரத்தில் வரைந்து சாதித்துள்ளார். சிறிய மாத்திரையில் யோக முத்திரைகளை வரைந்த தொழிலாளி ராஜாவுக்கு பாராட்டு குவிகிறது.