ஆற்றங்கரையோரம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் | Audi Tharppanam | Kerela
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மழையை பொருட்படுத்தாமல் ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி பல இடங்களில் நடந்தது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் கரையோரங்களில் தர்ப்பணம் நடத்த அரசு அபாய எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடும் விரிவாக செய்யப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து புகழ்பெற்ற ஆலுவா சிவன் கோயில், திருவனந்தபுரம் திருவல்லம் பரசுராமர் கோயில், மலப்புரம் மாவட்டம் திரூர் அருகே திருனாவாய நாவா முகுந்தர் கோயில், வயநாடு திருநெல்லி சிவன் கோயில், திருச்சூர் மாவட்டத்தில், பாம்பாடி ஐவர்மடம், பாலக்காடு மாவட்டம் கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயில், ஆனிக்கோடு அஞ்சு மூர்த்தி கோயில், மேற்கு யாக்கரை விஸ்வேஸ்வரர் கோயில் என பல இடங்களில் அதிகாலை முதல் ஏராளமானோர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். மாநிலத்தின் பல்வேறு கடற்கரை ஓரங்களில் இவ்வழிபாடு நடத்த பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.