/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ வாட்டுது வாழை நோய்! கலக்கத்தில் விவசாயிகள்; கண்டுக்கொள்ளாத அதிகாரிகள்
வாட்டுது வாழை நோய்! கலக்கத்தில் விவசாயிகள்; கண்டுக்கொள்ளாத அதிகாரிகள்
கோவை மாவட்டத்தில் அன்னுார் உள்பட பல இடங்களில் வாழையை வாடல் நோய் அடிக்கடி தாக்குகிறது. இந்த நோய் பல ஆண்டுகளாக இருந்தாலும், இதற்கு நிரந்தர தீர்வு இல்லை. இதனால், வாழை விவசாயம் செய்யும் விவசாயிகள் ஆண்டுதோறும் நஷ்டத்தை தான் சந்தித்து வருகிறார்கள். அன்னுார் மற்றும் சிறுமுகை ஆகிய பகுதிகள் வாழைக்கு பெயர் போனவை. அதனால் தான் அந்த பகுதிகளில் வாழை பயிரிடப்படுகிறது. நோய், சூறைக்காற்று போன்றவற்றால் பாதிக்கப்படும் வாழை விவசாயிகள் படும் கஷ்டங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜன 18, 2024