காதலுக்கு உயிரை விடும் இருவாச்சி பறவை
பொதுவாக பறவைகளுக்கும், சுற்று சூழலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கோவையில் நானுாறுக்கும் அதிகமான பறவை இனங்கள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைக்கே உரித்தான பறவை ஒன்று உள்ளது. அது இருவாச்சி பறவை ஆகும். காதலுக்கு எடுத்துக்காட்டாக கூட இந்த பறவையை சொல்வார்கள். இனப்பெருக்க காலத்தில் ஆண், பெண் பறவைகளில் ஒன்று இறந்தால் மற்றொரு பறவையும் இறந்து விடும். அந்த அளவுக்கு ஒன்றையொன்று அன்பு செலுத்தக்கூடியவை. பறவைகளை நாம் ஏன் காப்பாற்ற வேண்டும், அவற்றின் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
டிச 11, 2024