/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்பு | cancer awareness marathon competition| covai
21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்பு | cancer awareness marathon competition| covai
கோவையில் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். 21 கிலோ மீட்டர், 10 கிலோமீட்டர், 5 கிலோ மீட்டர் மற்றும் கார்ப்பரேட் ரிலே ஆகிய நான்கு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. கலெக்டர் கிராந்தி குமார் பாடி, முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கோவை வ.உ.சி. மைதானத்தில் கொடி அசைத்து போட்டியை துவக்கி வைத்தனர். போட்டியில் வெற்றி பெறும் வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்படும். ஏற்பாடுகளை கோவை கேன்சர் பௌண்டேஷன் குழுவினர் செய்தனர்.
டிச 15, 2024