/ மாவட்ட செய்திகள் 
                            
  
                            /  கோயம்புத்தூர் 
                            / சின்னவேடம்பட்டி ஏரியில் கழிவு நீரா? தன்னார்வலர்கள் அதிர்ச்சி...                                        
                                     சின்னவேடம்பட்டி ஏரியில் கழிவு நீரா? தன்னார்வலர்கள் அதிர்ச்சி...
கோவை வடக்கு பகுதியின் முக்கிய நீர் ஆதாரமான சின்ன வேடம்பட்டி ஏரி சமீப காலமாக சீரமைக்கப்பட்டது. இதனால் 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த ஏரியில் நீர் வருகிறது. இந்த நிலையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் சின்னவேடம்பட்டி ஏரியில் கொண்டுவந்து தேக்கி வைக்கப்படும் என்று கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னவேடம்பட்டி ஏரி குடிநீருக்கான ஆதாரமாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சின்னவேடம்பட்டி ஏரியில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் தேக்கி வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
 ஜன 16, 2025