உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தென்னை விவசாயிகளை கைது செய்யாதீங்க விவசாயி வேண்டுகோள் | Coimbatore | Don't Arrest Coconut Farmers

தென்னை விவசாயிகளை கைது செய்யாதீங்க விவசாயி வேண்டுகோள் | Coimbatore | Don't Arrest Coconut Farmers

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் தென்னை விவசாயத்தில் நோய் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விளைச்சல் இல்லை. தேங்காய்க்கு உரிய விலையும் கிடைக்கவில்லை. இதனால் பொள்ளாச்சி, நெகமம், ஆனைமலை விவசாயிகள் கள் இறக்கி விற்பனை செய்கின்றனர். தடையை மீறி கள் இறக்கி விற்பனை செய்யும் விவசாயிகளை போலீசார் கைது செய்கின்றனர். இதைக் கண்டித்து விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வேட்டைக்காரன் புதூரை சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணியம் கையில் கட்டுக் கம்பிகளை விலங்கு போல் கட்டிக்கொண்டு கள் இறக்க அனுமதி வழங்க கோரி சப் கலெக்டரிடம் மனு அளித்தார்.

மே 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை