கருந்தலைப்புழு தாக்குதல் தென்னை விவசாயிகள் கவலை...
கோவையை அடுத்த சூலுார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தென்னை மரங்களில் கருந்தலை புழுக்களின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் தென்னை மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதை கட்டுப்படுத்துவதற்காக ஒட்டுண்ணிகள் தோட்டக்கலைத்துறை சார்பில் வழங்கப்படுகின்றன. அப்படியிருந்தும் கருந்தலை புழுக்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த பிரச்னைக்கு தோட்டக்கலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 08, 2026