மேல் நீராறு அணையில் 197 மி.மீ. மழை | Coimbatore | Solaiyar Dam
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த ஜூன் முதல் தென் மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த மாதம் மழை தீவிரமடைந்ள்ளது. கடந்த 19 ம் தேதி 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை நிரம்பியது. அணையில் இருந்து சேடல் டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. கடந்த 2 நாட்களாக வால்பாறையில் தொடர் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக மேல்நீராறு அணையில் 197 மி.மீ. மழை பெய்தது. இதனால் சோலையாறு அணை மீண்டும் நிரம்பியது. இந்த ஆண்டில் 4 முறை சோலையாறு அணை நிரம்பியதால் பி.ஏ.பி. பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆக 30, 2024