/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ மழை வந்தா மாநகராட்சிக்கு போன் போடணும்! தண்ணீரில் தத்தளிக்கும் பள்ளி
மழை வந்தா மாநகராட்சிக்கு போன் போடணும்! தண்ணீரில் தத்தளிக்கும் பள்ளி
மழை பெய்தால் கோவை சேரன்மாநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து விடும். இதற்கு காரணம் பள்ளி வளாகத்தில் மழை தண்ணீர் குளம் போல் தேங்குவதால் தான். மேலும் பள்ளி வளாகம் சுத்தமாக இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் பெற்றோர் தரப்பில் வைக்கப்படுகிறது. கழிவறை வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இங்கு செய்து தரப்படவில்லை. மழைக்காலங்களில் பெற்றோர் மிகுந்த சிரமத்துக்கிடையில் தான் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்கள். சேரன்மாநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் அவலங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 25, 2024