உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கூடைப்பந்து போட்டி மாணவிகள் உற்சாகம்

கூடைப்பந்து போட்டி மாணவிகள் உற்சாகம்

டெக்சிட்டி கூடைப்பந்து கழகம் சார்பில் 17 வது ஸ்ரீ தேவராஜூலு நினைவு கோப்பைக்கான ஆணகள் கூடைப்பந்து போட்டி மற்றும் மாணவ மாணவியருக்கான முதலாம் ஆண்டு கோட் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் கோப்பை போட்டிகள் கூடைப்பந்து சங்க மைதானத்தில் ஜனவரி 5 ம் தேதி முதல் 12 ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆண்கள் பிரிவில் 25 அணிகள், மாணவர் பிரிவில் 12 அணிகள் மற்றும் மாணவியர் பிரிவில் 10 அணிகள் பங்கேற்று நாக் அவுட் முறையில் போட்டியிடுகின்றன. மாணவர் பிரிவில், சுகுணா பிப்ஸ் பள்ளி அணி 30 - 9 என்ற புள்ளிக்கணக்கில் பீபாள் பள்ளியையும், பி.எஸ்.ஜி சர்வஜனா பள்ளி அணி 50 - 11 என்ற புள்ளிக்கணக்கில் பேசினேட்டிங் யுத் அணியையும், பெர்க்ஸ் பள்ளி அணி 61 - 38 என்ற புள்ளிக்கணக்கில் பாரதி பள்ளி அணியையும் வீழ்த்தியது. மாணவியர் பிரிவில், ஒய்.எம்.சி.ஏ அணி 61 - 10 என்ற புள்ளிக்கணக்கில் அல்வேர்னியா கிளப் அணியையும், அல்வேர்னியா பள்ளி அணி 78 - 10 என்ற புள்ளிக்கணக்கில் விஷ்வதீப் அணியையும், பாரதி அணி 67 - 24 என்ற புள்ளிக்கணக்கில் ஆதித்யா பப்ளிக் பள்ளியையும், எஸ்.வி.ஜி.வி பள்ளி அணி 28 - 20 என்ற புள்ளிக்கணக்கில் சுகுணா பிப் அணியையும் வீழ்த்தின.

ஜன 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ