யானை - மனித மோதலை கட்டுப்படுத்த வேண்டும் | Coimbatore
கோவை மாவட்டத்தில் காட்டு யானை-மனித மோதல் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இந்த நிலைமை 30 ஆண்டுகளுக்கு முன்பு கிடையாது. இதை எப்படி கட்டுப்படுத்துவது என்றால் யானையுடன் மனிதர்கள் இணைந்து வாழ வேண்டுமா என்றால் அதுவும் நடக்காத காரியம். யானைகளின் ஊடுருவலை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை வனத்துறை எடுத்தாலும் அது முழுமை அடைவதில்லை. தற்போது லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் யானை-மனித மோதலை தடுக்க நிரந்தர தீர்வை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ள எம்.பி., எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. அது பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.
ஏப் 11, 2024