/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ வேலையில் சேர்ந்தோர் 1,200 பேர், நீடிப்போர் 30 பேர் - அதிர்ச்சி தகவல்கள்
வேலையில் சேர்ந்தோர் 1,200 பேர், நீடிப்போர் 30 பேர் - அதிர்ச்சி தகவல்கள்
கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. தங்கள் நிறுவனத்துக்கு தேவையான நபர்களை தனியார் நிறுவனத்தினர் அங்கேயே தேர்ந்தெடுக்கின்றனர். அவ்வாறு பணிக்கு சேர்ந்த நபர்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தொடர்பு கொண்டு வேலையில் சேர்ந்தீர்களா... வேலை பிடித்திருக்கிறதா... முறையான சலுகைகள் வழங்கப்படுகிறா... உட்பட பல கேள்விகளை தகவல் பெறுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இது போன்ற தகவல்களை கேட்க போன் செய்யும் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி தான் காத்திருக்கிறது. அது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 07, 2024