இ நாம் திட்டம்... விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்
கோவையை அடுத்த வடக்கிப்பாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு தென்னை விவசாயிகள் தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். அவர்கள் கொண்டு வரும் தேங்காய் பருப்புகளை எடை போட்டவுடன் அது ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதில் ஈரப்பதம் எவ்வளவு இருக்கிறது என்பதை கணக்கிட்டு விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதன் வாயிலாக இந்தியாவில் உள்ள எந்த விற்பனை மையத்திலும் தேங்காய் பருப்புகளை விற்க முடியும். இ-நாம் திட்டத்தின் வாயிலாக விவசாயிகள் தங்கள் விளைப் பொருட்களை எப்படி விற்கலாம் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
ஏப் 12, 2025