/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ தனியார் பஸ்களின் அட்டூழியம்; அதிகாரிகளின் மெத்தனம்! பறிபோகும் அப்பாவி உயிர்கள்
தனியார் பஸ்களின் அட்டூழியம்; அதிகாரிகளின் மெத்தனம்! பறிபோகும் அப்பாவி உயிர்கள்
கோவை மாநகரில் சில தனியார் பஸ்களில் நிர்ணயிக்கப்பட்டதற்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதும், விதிமுறைகளை மீறுவதும் சில நாட்களுக்கு முன்பு தினமலர் நடத்திய கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் பின்னோக்கி செலுத்தப்பட்ட தனியார் பஸ் மோதி ஒருவர் பலியானார். இதில் அந்த பஸ் டிரைவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. சில நாட்களுக்கு முன்பு அதிகாலையில் காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் ஒன்று மோதி 8 பேர் காயமடைந்தனர். கோவையில் இப்படி தொடர்ந்து அத்துமீறும் தனியார் பஸ்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 16, 2024