கோவையில் ஜி.டி. நாயுடு கட்டிய வாட்டர் டேங்க்! சமூக சேவையிலும் ஓர் தொலைநோக்குப் பார்வை
இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்படும் ஜி.டி.நாயுடு கல்வியாளராகவும், கண்டுபிடிப்பாளராகவும் விளங்கியவர். அது மட்டுமல்லாமல் அவர் சமூக சேவையிலும் தனி முத்திரை பதித்தவர். முன்பு போத்தனுார் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை நிலவியது. இதை போக்குவதற்காக போத்தனுார்-செட்டிப்பாளையம் பகுதியில் ஜி.டி.நாயுடு தனக்கு சொந்தமான இடத்தில் ஒரு போர்வெல் போட்டு மக்களுக்கு இலவசமாக குடி தண்ணீர் கொடுத்தார். இதைத் தொடர்ந்து அந்த தண்ணீருக்கு உள்ளாட்சி அமைப்பு வரி விதித்தது. இதை எதிர்த்து பொது மக்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக வரி விதித்ததை உள்ளாட்சி அமைப்பு விலக்கி கொண்டது. இப்படி சமூக நலனில் அக்கறை கொண்ட ஜி.டி.நாயுடுவின் பொது சேவைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.