/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ரவுண்டானாவை மாற்றி அமைத்தால் டிராபிக் குறையும் | அல்லல்படும் வாகன ஓட்டிகள்
ரவுண்டானாவை மாற்றி அமைத்தால் டிராபிக் குறையும் | அல்லல்படும் வாகன ஓட்டிகள்
கோவை அவினாசி சாலையில் கட்டப்பட்ட ஜி.டி.நாயுடு மேம்பாலம் உப்பிலிபாளையத்தில் இறங்கும் இடத்தில் ரவுண்டானா அமைக்கப்பட்டது. ஆனால் அந்த இடத்தில் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது தவிர அவினாசி ரோடு பழைய மேம்பாலத்தின் கீழும் வாகன நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. விமானநிலையத்தில் இருந்து புறப்பட்டு ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் வேகமாக வரும் வாகனங்கள் அவினாசி ரோடு பழைய மேம்பாலத்தில் வரும் போது நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன. இந்த வாகன நெரிசலை தீர்ப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
நவ 21, 2025