நிழல்வலை கூடாரத்தில் நாற்று உற்பத்தி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தோட்டக்கலைத்துறையின் மானியத்தில் நிழல் வலை கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. தக்காளி, கத்தரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறி நாற்றுகள் இந்த கூடாரத்தில் விளைவிக்கப்படுகின்றன. இதற்கு முன்பு பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் உடுமலை சென்று தான் நாற்றுகளை வாங்கி வந்தனர். ஆனால் இப்போது பொள்ளாச்சியிலேயே இந்த நாற்றுகள் தயார் செய்யப்படுவதால் விலை குறைவாக கிடைக்கிறது. நிழல் வலை கூடாரத்தில் நாற்றுகள் விளைவிக்கப்படுவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
நவ 09, 2024