ஓட்டுக்கு மட்டும் வராங்க... மனசாட்சியை உலுக்கும் கிராமம்...
கோவை மாவட்டம்,பொகலூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதி ஆணைப்பள்ளி புதூர். இந்தப் பகுதியில் சுமார் 25 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இடத்தை விலைக்கு வாங்கி, பத்திரப்பதிவு செய்து வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்கள். பட்டா மாறுதலுக்காக செல்லும்போது இந்த இடத்திற்கு பட்டா வழங்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த இடமானது பூமிதான இயக்கத்தின் மூலம் பெறப்பட்டதாக கூறப்பட்டது. இது தெரியாமல் மக்கள் விலைக்கு வாங்கியுள்ளனர். இதனால் மக்கள் படும் துயரங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 10, 2026