கலை இளமணி விருது வென்ற கோவை பள்ளி மாணவி
கோவை மாநகராட்சி பள்ளியில் 7 ம் வகுப்பு படிக்கும் மாணவி நிரஞ்சனா, சாக்ஸாபோன் இசைக்கருவியை வாசித்ததை பாராட்டி கலை பண்பாட்டு இயக்கம் சார்பில் கலை இளமணி விருது வழங்கப்பட்டுள்ளது. இசைக்கருவியை இசைப்பது மட்டுமின்றி படிப்பிலும், அவர் முதல் இடத்தை பிடித்து வருகிறார். எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் அந்த மாணவி மிகவும் கடினமான சாக்ஸாபோனை வாசித்து விருது பெற்றதை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். மாற்றுத் திறனாளிகள், மற்றவர்களை விட திறமை மிக்கவர்களாக இருப்பார்கள். அத்தகைய திறமையுள்ள மாணவி நிரஞ்சனாவின் சாதனை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 18, 2024