ஒளிரும் தீபம்... ஒளிராத தொழிலாளர் வாழ்க்கை
தமிழர்கள் கொண்டாடுகின்ற பல விழாக்களில் கார்த்திகை தீபமும் ஒன்று. இருளை அகற்றி ஒளிமயமான வாழ்க்கையை கார்த்திகை தீபத்திருநாள் கொடுக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே இருப்பதால் கார்த்திகை தீபம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபம் நெருங்கும் போது கோவை உட்பட பல பகுதிகளில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் அகல் விளக்கு தயாரிப்பு பணியை இரண்டு மாதங்களுக்கு முன்னரே துவக்கி விடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு தொடர்ந்து பெய்த மழையின் காரணமாகவும் மண் தட்டுப்பாடு காரணமாகவும் விளக்குகள் தயாரிப்பது தாமதமானது. இதற்கான காரணங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
டிச 13, 2024