குடிநீர் சப்ளையில் அசத்தும் கிராமம்...
கோவை மாவட்டம் சூலுார் அருகேயுள்ள வடுகபாளையம் உள்ளிட்ட ஐந்து பகுதிகளில் குடிதண்ணீர் சீராக வினியோகிக்கப்பட வேண்டும் என்பதற்காக தானியங்கி வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பகுதியில் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. தானாகவே வினியோகம் நிறுத்தப்படுகிறது. இதற்கு ஆட்கள் நியமிக்கப்படவில்லை. இந்த முறையினால் மின்சாரம் மிச்சமாகிறது. சுமார் 30 ஆயிரம் லிட்டர் குடி தண்ணீரும் மிச்சமாகிறது. பொது மக்களிடமிருந்து குடி தண்ணீருக்காக எந்த புகாரும் வருவதில்லை. தானியங்கி குடிநீர் வினியோகம் செய்வது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
டிச 05, 2024