/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | malaiamman temple kumbabhishekam | udumalpet
திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | malaiamman temple kumbabhishekam | udumalpet
உடுமலை எம்.பி. நகரில் உள்ள ஸ்ரீமாலையம்மன் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் முடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழா யாக வேள்வியுடன் துவங்கியது. வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கோயில் கோபுரங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை வெகு விமரிசையாக நடத்தி வைத்தனர். பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. அன்னதானம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.
நவ 11, 2024