மனநோய்க்கு மருந்து மட்டும் போதாது ஆலோசனையும் அவசியம் | மனமே நலமா? பகுதி- 28 | Dr.Srinivasan
மனநல நோய்களுக்கு நாள்பட்ட சிகிச்சை தேவைப்படுகிறது. ஏனென்றால் அது நாள்பட்டு இருக்கிற வியாதி. ஒரு நாளில் உருவான வியாதி அல்ல. இதற்கு பல காரணங்களை கூறலாம். ஒரு பிரச்சினையின் தீவிரம் அனைவருக்குமே இருக்கிறது என்றாலும் கூட அதனால் பாதிக்கப்படக் கூடியவர் மிகச் சிலர். எனவே இத்தகைய நாள் பட்ட சிகிச்சைக்கு பல நாள் சிகிச்சை தான் அளிக்கப்பட வேண்டும். இதில் பிரச்னை என்னவென்றால். சிகிச்சையின்போது சற்று குணமானால், அந்த சிகிச்சையை பலர் நிறுத்தி விடுகிறார்கள். பின்னர் பிரச்னை தீவிரம் ஆன் பின்னர் மீண்டும் மருத்துவரை அணுகுவார்கள். இதனால் முன்பை விட அதிக அளவில் மருந்துகள் உட்கொள்ள வேண்டியிருக்கும். இது ஆபத்தானது. எனவே மனநோய்க்கு மருந்து மட்டும் போதாது, ஆலோசனையும் அவசியம் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.