முடிவு எடுக்கும் திறமையை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள் | மனமே நலமா? பகுதி- 39 | Dr.Srinivasan
மனிதர்களுக்கு 25 வயதில் தான் மூளை சரியான வளர்ச்சி பெறும் என்று சொல்கிறார்கள். அதற்கு முன்பாக வளர் இளம் பருவத்தில் உள்ள குழந்தைகள் பிரச்னையை குறைத்து மதிப்பிடுகிறார்கள். அவர்கள் செய்யும் காரியங்களில் உள்ள பலனை அதிகமாக்கி காண்பிக்கிறார்கள். இத்தகைய சிந்தனை அவர்களிடம் இருக்கிறது. அதற்கு பெற்றோர் என்ன செய்ய வேண்டும். ஒரு பிரச்னை என்றால் அதுபற்றி அவர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். குழந்தைகளை பேச விட்டு அதன் வாயிலாக அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்றாற் போல முடிவு எடுக்கும் திறமையை குழந்தைகளுக்கு பெற்றோர் கற்றுக் கொடுக்க வேண்டும். இப்படி குழந்தைகளிடம் பெற்றோர் எப்படி பழக வேண்டும் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.