நாட்டு மாடுகளை காக்க ரேக்ளா வண்டி ஓட்டுங்க...
கோவை மாவட்டத்தில் காளைகள் பூட்டிய மாட்டு வண்டிகள் அதிகம் தென்படுகின்றன. இதற்கு காரணம் காளைகள் வளர்ப்பதிலும், ரேக்ளா வண்டி பந்தயத்தில் பங்கு கொள்வதிலும் அதிகம் பேர் குறிப்பாக இளைய தலைமுறையினர் கவனம் செலுத்துவது தான். சாலைகளில் ரேக்ளா வண்டிகள் சென்றால் காரில் செல்பவர்கள் கூட அதை திரும்பி பார்க்கிறார்கள். இன்றைய தலைமுறையினர் காளை மாட்டு வண்டி ஓட்டுவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் ஆயிரக்கணக்கில் விற்ற காளைகள் இன்று லட்சக்கணக்கில் விற்கப்படுகின்றன. நாட்டு மாடுகளை காப்பாற்றுவதற்காக இளைய தலைமுறையினரும் ரேக்ளா வண்டி ஓட்ட வேண்டும் என்பதை வலியுறுத்துவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 16, 2025