உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அழிவின் விழிம்பில் உள்ள கரும் வெருகை பாதூகாக்க நடவடிக்கை

அழிவின் விழிம்பில் உள்ள கரும் வெருகை பாதூகாக்க நடவடிக்கை

அழிவின் விழிம்பில் உள்ள கரும் வெருகை பாதூகாக்க நடவடிக்கை | Coimbatore | Measures to protect endangered species தமிழக வனத்துறை செயலர் சுப்ரியா சாகு தனது டிவிட்டர் பக்கத்தில் கரும் வெருகு விலங்கு குறித்து பதிவிட்டுள்ளார். அதில், நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை பூர்வீகமாக கொண்ட 2 முதல் 3 கிலோ எடையுடன் கூடிய நீலகிரி மார்டன் எனப்படும் கரும் வெருகு உயிரினம் தென்பட்டுள்ளது. இது வனப் பகுதிகளில் விளையக்கூடிய அரிய வகை பழங்களை மட்டுமே விரும்பி உண்ணக்கூடியது. சாக்லேட் நிறத்திலான ரோமங்கள், மஞ்சள் நிற தொண்டையுடன் காணப்படும். மேகமலை பகுதியில் அதன் நடமாட்டத்தை வன ஊழியர் கண்காணித்து விடியோ எடுத்துள்ளனர். அழிந்து வரும் சிவப்பு பட்டியலில் உள்ளது. அதிகம் அறியப்படாத உயிரினங்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என பதிவிட்டுள்ளார்.

பிப் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி