ஊரில் இருக்கணுமா ஓடணுமா! நரிக்குறவர் என்பதாலே அலட்சியமா?
கோவை மாவட்டம் காரமடையை அடுத்த திம்பம்பாளையம் புதுார் பகுதியில் நரிக்குறவர்கள் ஏராளமானவர்கள் வசிக்கிறார்கள். சுமார் 200 குடும்பத்துக்கு மேல் வசிக்கும் அந்த இடத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். குடிநீர், சாக்கடை, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அவர்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. திம்பம்பாளையம் புதுார் பகுதி மக்களின் அடிப்படை வசதிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
 டிச 26, 2024