/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ வீட்டில்வைத்து பூஜித்தால்ஐஸ்வர்யம்பெருக்கும்நெற்கதிர்கள்| Sabarimala | Niraiputri Puja at Sabarimala
வீட்டில்வைத்து பூஜித்தால்ஐஸ்வர்யம்பெருக்கும்நெற்கதிர்கள்| Sabarimala | Niraiputri Puja at Sabarimala
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரி பூஜை 12ம் தேதி திங்கட்கிழமை காலை 5.45 மணி முதல் 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது. நிறைபுத்தரி பூஜைக்கான நெற்கதிர்கள் தென்காசியில் இருந்து அச்சன் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. 11ம் தேதி சபரிமலைக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்படவுள்ளது. ஐயப்பனுக்கு நெற்கதிர்களால் பூஜை செய்யப்பட்ட நெற்கதிர்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். நெற்கதிர்களை வீடுகளில் வைத்தால் ஜஸ்வரியம் பெருகும் என்பது ஐதீகம். பூஜைக்கான ஏற்பாடுகளை அச்சங்கோயில் திருஆபரணம் கமிட்டி தலைவர் ஏசிஎஸ்ஜி ஹரிஹரன் உபதேச கமிட்டி தலைவர் பிஜூலால் அச்சன்கோயில் தேவசம் நிர்வாக அதிகாரி துளசிதரன் பிள்ளை ஆகியோர் செய்கிறார்கள்.
ஆக 09, 2024