செலவு பண்ணி ரோடு போட்டீங்க... சிறுபாலங்கள் தான் எங்கேங்க...
கோவை மாவட்டம் அன்னுார் அருகே பச்சாகவுண்டனுாரில் புதிதாக சாலை போடப்பட்டுள்ளது. ஆனால் அந்த சாலையின் குறுக்கே சிறு பாலம் நான்கு இடங்களில் கட்டப்பட வேண்டும். அவற்றை கட்டாமல் சாலையை போட்டு விட்டு சென்று விட்டனர். இதனால் மழைக்காலங்களில் மழை தண்ணீர் ஓரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே புதிய சாலை போட்டது மட்டுமல்லாமல் சிறு பாலங்களும் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 26, 2025